உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு வங்கி கோயம்புத்தூரின் வைஷ்னவி பாலாஜி நமது சிம்ப்ளிசிட்டி நிரூபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:-

கோவையில் புட் பேங்க் கோயம்புத்தூர் அமைப்பினை துவங்கும் போது எங்களிடம் 4 உறுப்பினர்களே இருந்தனர். தற்போது, நேரடியாக 200 உறுப்பினர்கள் இணைந்து உணவின்றி தவிக்கும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். எங்களது முக்கிய குறிக்கோள் பசியற்ற தேசத்தை உருவாக்குவதே ஆகும். 

வரும் மே 28 ஆம் தேதி உலக பசி தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 27ம் தேதியன்று கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, புட் பேங்க் கோயம்புத்தூரின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆவணப்படத்தையும் திரையிட உள்ளோம்.

மேலும், உலக பசி தினமான 28ம் தேதியன்று குழந்தைகள் மூலம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் குழந்தைகளிடத்தில் சமூகத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கும். மேலும் அவர்கள் உணவின் முக்கியத்துவத்தையும், பசியை ஒழிப்பதற்கான வழிகளையும் கற்றுக்கொள்வார்கள். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, வஉசி பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசித்தோருக்கு உணவு வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு மற்றும் உணவு இயக்கத்தில் சேர விரும்பும் குழந்தைகள் உணவு வங்கி கோயம்புத்தூரில் தொடர்பு கொள்ளலாம். இது பசி இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு எங்களது 160-வது முயற்சி ஆகும்" என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...